இன்று உலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான மக்கள் மரணித்து வருவதை பார்த்து கவலைப்படுகின்றோம். ஆனால் இரண்டாம் உலகப்போரின்போது இதைவிட பல இலட்சக்கணக்கான மக்கள் பயங்கரமான ஆயுதங்களாலும் வெடிகுண்டுகளாலும் மரணித்தனர். அப்படி போர்க்கள நாடுகள் தமது நாட்டின் எதிரி நாடுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தமது கண்டுபிடிப்பாளர்களிடம் இருந்து பல பயங்கர ஆயுதங்களை செய்தே உலகத்தின் பலசாலி என்று மாறி மாறி வெளிப்படுத்தி வந்தன. அவ்வாறு உருவாகிய ஆயுதங்கள் சில நேரங்களில் வெற்றியை அளிக்கின்றன. சில சமயங்களில் அவை வெற்றியளிப்பதில்லை. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போரின் 7 பயங்கர ஆயுதங்கள் பற்றி இன்று பார்ப்போம்.
பலூன் குண்டுகள் (ஜப்பான்)
ஜெட் ஸ்ட்ரீமில் பல சிறிய தீக்குண்டுகளை ஏந்திய பலூனை அனுப்பியது ஜப்பான். அந்த பலூன் மேற்கு அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு மேலே பறக்கும்போது அங்கு டைமர்கள் வெடிகுண்டுகளை வெளியிட்டார்கள். இது காட்டுத் தீயையும் ஏற்படுத்தியது. அவர்களில் சிலர் அந்த வெடிகுண்டுகளை போட்டனர். ஆனால் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை.
கிராண்ட்ஸ்லாம் / பூகம்ப வெடிகுண்டு (UK)
பார்ன்ஸ் வாலிஸால் உருவாக்கப்பட்ட ஒரு வெடிகுண்டுதான் இது. அது விடப்பட்டால் தரையில் ஆழமாக ஊடுருவிவிடும் மாபெரும் வெடிப்பு அதிர்ச்சி அலைகள் மூலம் அணைகள், பாலங்கள், சுரங்கங்கள், நிலத்தடி தொழிற்சாலைகள், நீர்மூழ்கிக் கப்பல் தாங்கும் துறைகள் போன்ற கட்டமைப்புகளை இடித்துவிடும். 25,000 அடியிலிருந்து வீழ்த்தப்பட்ட இந்த 10 டன் கிராண்ட்ஸ்லாம் பூமியில் ஆழமாக புதைந்து வெடிக்கும் நேரத்தில் சூப்பர்சோனிக் வேகத்தை எட்டும். இந்த குண்டுகள் ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பல்களை வைத்திருக்கும் இடங்களையும் ரயில் பாதை சுரங்கங்கள், போர்க்கப்பல் டிர்பிட்ஸ் ஆகியவற்றைத் தாக்கவும், கலீஸில் அமைந்துள்ள வி -3 ராட்சத துப்பாக்கிகளை அழிக்கவும் பயன்படுத்தப்பட்டன.
குறிப்பு: யுத்தத்தின் பின்னர் அமெரிக்கா தங்களது சொந்த 43,000 பவுண்டு குண்டை டி-12 என்று உருவாக்கியது. ஆனால் அணுகுண்டுகள் கிடைத்ததிலிருந்து அதை ஒருபோதும் பயன்படுத்தவில்லை.
க்ரம்லாஃப் (ஜெர்மனி)
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி உருவாக்கிய ஸ்டர்ம்ஜெவெர் 44 தாக்குதல் துப்பாக்கிக்கான வளைந்த பரல் இணைப்பாகும். வளைந்த பரலில் ஒரு பாதுகாப்பான நிலையில் இருந்து எந்த மூலையிலும் சுடுவதற்கு பெரிஸ்கோப் பார்க்கும் சாதனம் இருந்தது. ஒரு கவச வாகனத்தின் உள்ளே இருந்து தாக்க முடியும். இது வெடிபொருட்கள் அல்லது ஆயுதம் ஏந்திய காலாற்படை வீரர்களிடமிருந்து தாங்கியை பாதுகாக்கும். பரல் வளைவுக்குள் தோட்டாக்கள் உடைந்தாலும், ஆயுதத்தின் குறுகிய தன்மை உண்மையில் அதன் பயன்பாட்டை மிகவும் பயனுள்ளதாக மாற்றியது. இது பல்வேறு வகைகளில் பல்வேறு வளைவுகளுடன் வந்தது. ஒரு சிறிய பெரிஸ்கோப் இணைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த ஆயுதத்தை இயக்குபவர் எதனை குறிவைக்கின்றார் என பார்க்க முடியும்.
ME –163 கோமெட் (ஜெர்மனி)
ஜேர்மனி நாட்டு குண்டுவீச்சாளர்களால் போரின் முடிவில் விரக்தியில் செய்யப்பட்ட ஒரு குறுகிய ஸ்டப்பி ரொக்கெட் கோமேட் இதுவாகும். 700 மைல் திறன் கொண்ட கோமேட் வெகுதூரம் பறக்க முடியவில்லை. ஆனால் இலக்கு அருகில் அமைந்தால் அது வேறு எந்த விமானத்தையும் விடவும் விரைவாக உயரத்தை எட்ட முடியும் மற்றும் அதிவேகமாக செல்ல முடியும். வால் இல்லாத ரொக்கெட் விமானம் 2 X 30 MM பீரங்கிகளால் ஆயுதம் ஏந்தியிருந்தது. பெரும்பாலான கோமெட்டுகள் தங்கள் சொந்த விமானிகளால் அழிக்கப்பட்டன. ஏனென்றால் விமானத்தை கையாள கடினமாக இருந்தாலும் அல்லது கோமேட் தரையிறங்கும் போது தரையில் எதிரி நாடுகள் தாக்குவதாலும். ஜேர்மனியர்கள் இந்த விமானத்திற்கான ஜப்பானிய திட்டங்களை வழங்கினர். மற்றும் ஜப்பானியர்கள் அதன் சொந்த பதிப்பை வடிவமைத்தனர்.
வௌவால் வெடிகுண்டுகள் (அமெரிக்கா)
பறக்கும் விமானத்தில் இருந்து டஜன் கணக்கான வெளவால்களைக் கொண்ட அந்த சிலிண்டர் ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய தீக்குண்டு பொருத்தப்பட்டிருந்தது. வெடிகுண்டுகள் இணைக்கப்பட்ட அந்த வௌவால்கள் மூச்சுத் திணறல் அல்லது உறைந்துபோகாத உயரத்தில் இருந்து விழுந்ததால், அவை எந்த நேரத்தில் ஜப்பானிய மரக்கட்டிடங்களின் மீது விழுமோ அந்த இடம் பற்றி எரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெரும்பாலும் மர ஜப்பானிய கட்டிடக்கலையில் இருந்த கட்டிடங்களும் அதன்படி எறிந்தன. ஆனால் ஒரு சிறிய எரியக்கூடிய டைமிங் வெடிகுண்டு பொருத்தி வடிவமைப்பது ஒரு உண்மையான சவாலாக இருந்தது. அதேபோல் வெளவால்களை வைத்திருத்தல், சிறிய மற்றும் வீரியம் மிக்க வெடிகுண்டுகளைத் தயாரித்தல் மற்றும் வௌவால்களை விமானத்தில் உயிருடன் வைத்திருத்தல் போன்றவையும் சவாலாக இருந்தன.
டம்பஸ்டர் வெடிகுண்டு (UK)
ஆயுத வடிவமைப்பாளர் பார்ன்ஸ் வாலிஸ் அவரால் தயாரிக்கப்பட்ட இன்னொரு வெடிகுண்டு ஆயுதம்தான் இது. இது 55 கலன்களின் விட்டத்தை கொண்டது. மேலும் கிட்டத்தட்ட 188 KMPH வேகத்தில் சுழன்று சென்று தாக்கும் இடத்தின் மேற்பரப்பை தவிடு பொடியாக மாற்றக்கூடியது. 9,250 பவுண்டு வெடிகுண்டுகள் வேலை செய்தன. ஆனால் சேதம் பெரும்பாலும் 4 மாதங்களுக்குள் சரிசெய்யப்பட்டது. இந்த தாக்குதலில் பள்ளத்தாக்கில் உள்ள கைதிகள் மற்றும் அடிமைத் தொழிலாளர்களே அதிகமாக உயிரிழந்தனர்.
கைடன் (ஜப்பான்)
ஒரு டார்பிடோ 3000 முதல் 4000 பவுண்டுகள் வெடிபொருட்களைக் கொண்டது. தற்கொலை செய்து கொள்ளக் கூடிய ஒபரேட்டர் அதை இயக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மனிதனால் இயக்கப்படும் டார்பிடோ நீரில் மூழ்கிய நீர்மூழ்கிக் கப்பல் மூலம் அனுப்பப்படும். இதன் ஒரு சிறிய பதிப்பு கடலோர பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்டது. 300 க்கும் மேற்பட்டவை தயாரிக்கப்பட்டு, இரண்டு சிறிய அமெரிக்க கப்பல்கள் மட்டுமே மூழ்கின. வழக்கமான டார்பிடோக்கள் கைடென்ஸை விட அதிக வெற்றி விகிதத்தைக் கொண்டிருந்தன.