பூச்சி இனத்தைச் சேர்ந்த கரப்பான் பூச்சிகளில் 4,000க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அவற்றில் 70 வகை பூச்சிகளே எமது வீடுகளில் வாழ்கின்றன. வெப்பமான காலநிலையில், கரப்பான் பூச்சிகள் எளிதாக இனப்பெருக்கம் செய்கின்றன. காட்டில் இருக்கும்போது, இந்த பூச்சி இனம் பழைய குவியல்களிலும், மரத்தின் தண்டுகளிலும், உயரமான மரக் கிளைகளிலும் வாழ்கின்றன. மனித வாழ்விடங்களில், கரப்பான் பூச்சிகள் கழிப்பறைகள், குளியலறைகள், சமையலறைகள், படுக்கையறைகள் போன்ற சூரிய ஒளி குறைவாக இருக்கும் இடங்களில் வாழ்கின்றன.
கரப்பான் பூச்சியின் இயல்பு
கரப்பான் பூச்சிகள் இரண்டு நீண்ட கொம்புகளையும் பறக்க உதவும் இரண்டு சிறிய இறக்கைகளையும் கொண்டுள்ளன. அவற்றின் உதவியால், கரப்பான் பூச்சியால் பறக்க முடிகிறது. பெரும்பாலான பூச்சிகளைப் போலவே, கரப்பான் பூச்சியின் உடலிலும் மூன்று பாகங்கள் உள்ளன. தலை, கழுத்து, அடிவயிறு ஆகிய மூன்று பாகங்களே அவை. இது இரண்டு செட்களாக ஆறு கால்களை கொண்டது. கரப்பான் பூச்சியின் இரண்டு மீசை போன்ற சென்சார் அல்லது ஆண்டெனா, உணவைக் கண்டுபிடித்து எதிரிகளை அடையாளம் காண பயன்படுகிறது. இந்த விடயங்களுக்கு மேலதிகமாக, கரப்பான் பூச்சிகள் சுற்றியுள்ள சூழலின் வெப்பநிலையை கண்காணிக்க அவற்றை பயன்படுத்தும்.
கண் மற்றும் வாய்
எங்களுக்கு இரண்டு கண்கள் உள்ளன. அதில் ஒரு லென்ஸ் மட்டுமே உள்ளது. ஆனால் கரப்பான் பூச்சியில் பல லென்ஸ் அடங்கிய கண்கள் உள்ளன. அதாவது அவை இரண்டு கண்கள் போல தோற்றமளிக்கும் நிறைய லென்ஸ்களை கொண்டுள்ளன. கரப்பான் பூச்சியானது தலை இல்லாமல் ஒரு வாரம் வரை உயிர் வாழக்கூடியது. இதனால் உடலின் ஏனைய பாகங்கள் வழியாகவும் சுவாசிக்க முடியும். அப்படியிருந்தும் ஏன் அதிக காலம் வாழமுடியாது என்றால், அதன் தலையிலேயே வாய் அமைந்துள்ளது. அதனால சாப்பாடு இல்லாமல் இறந்துவிடும். ஆனாலும் அதிக நாட்கள் வயிற்றில் உள்ள உணவை வைத்து மட்டுமே சமாளித்து உயிர் வாழ்கின்றது என்றால் ஆச்சரியமே.
பழங்கால வம்சங்கள்
இன்று பலவகையான கரப்பான் பூச்சிகள் உள்ளன. அமெரிக்கா, ஜெர்மனி, ஓரியண்டல் மற்றும் மடகாஸ்கர் போன்ற இடங்களில் இன்னும் மில்லியன் கணக்கில் வாழ்கின்றன. கரப்பான் பூச்சிகள் மிகப் பழைமையான பூச்சி இனமும்கூட. இந்த கரப்பான் பூச்சிகளின் நெருங்கிய வகைகள் இந்த உலகில் சுமார் 350 மில்லியன் ஆண்டுகள் வாழ்ந்துள்ளன. கரப்பான் பூச்சிகளால் நாற்பது நிமிடங்கள் வரை சுவாசத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியும். மேலும் நீருக்கடியில் 30 நிமிடங்கள் வரை உயிர்வாழ முடியும். அதே போல நீர் இல்லாத நேரத்திலும் மூச்சை கட்டுப்படுத்தி உயிர்பிழைக்க முடியும்.
கரப்பான் பூச்சியின் உணவு
கரப்பான் பூச்சியும் மனிதர்களை போலவே அனைத்துண்ணியாகும். மேலும் மனிதர்கள் சாப்பிடாத உணவைக்கூட அவை சாப்பிட தயாராகத்தான் இருக்கும். மேலும் எந்தவொரு காலநிலை உணவையும் தனது உடல் சூட்டிற்கு ஏற்றவாறு சாப்பிடும். இவை சாப்பிட முன் ஒரு உணவை சிறு சிறு துண்டுகளாக்கிய பின்னரே சாப்பிட ஆரம்பிக்கின்றன. மேலும் அமெரிக்கன் கரப்பான்களுக்கு பியர் என்றால் அதிகம் பிடிக்குமாம். ஏனெனில் அவை பியர் மற்றும் தானியங்களின் இனிப்பு வாசனையில் ஈர்க்கப்பட்டவையாகும்.
மனிதன் ஏன் பயப்படுகின்றான்?
கரப்பான் பூச்சியை குளியலறையிலோ அல்லது சமையலறையிலோ பெண்கள் கண்டால் கத்துவார்கள். கரப்பான் பூச்சியை உலகில் காணப்படும் பூச்சிகளில் ஒரு பயமுறுத்தும் பூச்சியினமாக பார்க்கின்றனர். இந்த கரப்பான் பூச்சி இரத்தம் உறிஞ்சுவதில்லை. ஆனால் சாப்பாட்டில் விழுந்து அதை கெடுக்க செய்கிறது. இது எப்படியாக இருந்தாலும் இந்த கரப்பான் பூச்சியையே பொரித்து சாப்பிடும் கூட்டமும் உலகில் வாழ்கின்றது.
சாப்பாடு, தண்ணீர் ஏன் தலைகூட இல்லாமல் வாழக்கூடிய இந்த உயிரினத்தை தெரியாதவர்கள் யாருமில்லை. சாப்பாடு சிந்தும் இடங்களிலும் அடுக்கு இடுக்குகளிலும் மறைந்து வாழக்கூடிய இந்த உயிரினம் நமது வாழ்வில் ஒன்றித்து வாழ்கின்றது. இதனை வீட்டில் இருந்து ஒழிக்க ஹிட் மோர்ட்டின் என்று விதவிதமாக ஸ்பீரே செய்தும், அலுமாரிகளில் கற்பூர பந்துகளை போட்டும் விரட்டுகிறார்கள். அதற்கான சீனர்களை போல பிடித்து பொரித்து சாப்பிட்டு நோய்களை தேடிக்கொள்ளாதீர்கள்.