நோபல் பரிசு தொடர்பான சில உண்மை  சம்பவங்கள்

 

உலகின் மிக உயர்ந்த அங்கீகாரம் பெற்ற பரிசுகளில் ஒன்றாக நோபல் பரிசு காணப்படுகின்றது. இந்த பரிசை பெறுபவருக்கு தங்கப் பதக்கம், டிப்ளோமா சான்றிதழ் மற்றும் பணப்பரிசும் கிடைக்கும். இவற்றைவிட அதிக நிதி வழங்கும் பிற பரிசுகள் இன்று உலகில் இருந்தாலும், நோபல் பரிசு என்ற அங்கீகாரம் தனித்துவமானது. நோபல் பரிசு பெரும் நபர்களை தீர்மானிக்க ஸ்வீடன் மற்றும் நோர்வேயில் பல அரசாங்க நிறுவனங்கள் செயற்படுகின்றன. இன்று நாம் நோபல் பரிசு பற்றிய மிகவும் பிரபலமான மற்றும் தெளிவற்ற சில கதைகளைப் பற்றி பேசப்போகிறோம்.

 

மரணத்தின் வியாபாரி

நோபல் பரிசுகள் டைனமைட்டைக் கண்டுபிடித்த ஸ்வீடிஷ் வேதியியலாளர் அல்பிரட் நோபலின் இறுதி விருப்பத்துடன் ஆரம்பித்தன. அவர் தனது சொத்தை இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தியுள்ளார். அவர் இந்த பரிசுகளை கொடுப்பதற்கான காரணம் சிறந்தது. டைனமைட்டின் கண்டுபிடிப்பு அவருக்கு பெரும் செல்வத்தைக் கொடுத்தது. ஆனால், தனது படைப்பு போருக்காகவும், மனிதர்களின் படுகொலைக்காகவும் பயன்படுத்தப்படுவது குறித்து அவர் கவலைப்பட்டார். ஒரு நாள், அவர் செய்தித்தாளில் சில விசித்திரமான செய்திகளைக் கண்டார். தவறான தகவல்களின் காரணமாக அல்பிரட் நோபலின் மரணம் குறித்து செய்தித்தாள் செய்தி வெளியிட்டிருந்தது. “மரணத்தின் வியாபாரி இறந்துவிட்டார்” என்ற தலைப்பு அதில் இடப்பட்டிருந்தது. தன்னை அல்ஃபிரட் நோபல் என்று அழைப்பதில் மிகுந்த கவலை கொண்ட அவர், தனது செல்வத்தை மனிதகுலத்தின் நல்வாழ்வுக்காகவும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்காகவும் பயன்படுத்த முடிவு செய்தார். அல்பிரட் நோபலின் கடைசி விருப்பம் இப்படித்தான் இருந்தது.

 

நோபல் பரிசும் பெண்களும்

நோபல் பரிசை அங்கீகரிப்பது பல நாடுகளில் ஒரு பொதுவான நிகழ்வு. எனினும், இது பெண் விஞ்ஞானிகளைப் பற்றி பெரிதாக அக்கறை செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு பொதுவாக காணப்படுகின்றது. நோபல் பரிசு வென்றவர்களில் பெண்களின் சதவீதம் மிகக் குறைவு என்பதே இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு காரணம். 1974 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு முதல் இந்த பிரச்சினை மிகவும் விவாதத்திற்கு உட்பட்டது. பல்சர் நட்சத்திரங்களைப் படித்ததால் அந்தோணி ஹெவிஷ் மற்றும் மார்ட்டின் ரியால் ஆகியோருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டது. இருப்பினும், அந்தோனி ஹெவிஷுடன் முழு ஆய்வை மேற்கொண்டு ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்ட ஜோசலின் பெல்லின் பெயரை நோபல் குழு தவறவிட்டது.

 

உருக்கப்பட்ட நோபல் பதக்கங்கள்

இரண்டாம் உலகப் போரின் போது, ​​நாஜி ஜெர்மனி விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பெற தடை விதித்தது. அமைதிக்கான நோபல் பரிசு அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் என்ற அடிப்படையில், ஜேர்மன் நோபல் பரிசு பெற்ற மேக்ஸ் வான் லோ மற்றும் ஜேம்ஸ் பிராங்க் ஆகியோர் அந்த நேரத்தில் மற்றொரு நோபல் பரிசு பெற்ற டென்மார்க்கிலுள்ள நீல்ஸ் போரிற்கு பதக்கங்களை அனுப்பினர். துரதிஷ்டவசமாக, டென்மார்க் ஜெர்மனியிடம் சரணடைந்தது. மேலும் அவரது நண்பர்கள் அனுப்பிய தங்கப் பதக்கங்களைப் பாதுகாப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க நீல்ஸ் பொர் நினைத்தார். அவரது சகாக்களில் ஒருவரான நோபல் பரிசு பெற்ற ஜோர்ஜ் ஹெஸ்ஸி ஒரு வித்தியாசமான ஆலோசனையை வழங்கினார். அதாவது தங்கப் பதக்கம் இரண்டையும் கரைப்பதே அந்த ஆலோசனை. அதன்படி இரண்டு பதக்கங்களும் ஆக்வா ரெஜியா என்ற அமில திரவத்தில் கரைக்கப்பட்டன. அப்போது படையெடுத்த ஜேர்மனியர்கள் ஆய்வகத்தில் தேடினர். ஆனால் எந்த தடயமும் கிடைக்கவில்லை. போருக்குப் பின்னர், ஜோர்ஜ் ஹெஸ்ஸி ஆய்வகத்திற்குத் திரும்பிச்சென்று ஸ்வீடிஷ் நோபல் பரிசு பெற்றவரிடம் அதனை ஒப்படைத்தார்.

 

நோபல் பரிசுகளின் மீது ஹிட்லருக்கு காணப்படும் வெறுப்பு

நோபல் பரிசுகளின் மீது 1935 இல் இருந்து ஹிட்லருக்கு வெறுப்புண்டானது. காரணம், ஹிட்லரை விமர்சித்த பத்திரிகையாளரான கார்ல் வான் ஓஸ்டுஸ்கிக்கு அந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதன் விளைவாக, ஜேர்மனியர்கள் நோபல் பரிசைப் பெறுவது தடைசெய்யப்பட்டது. மேலும் நாசி ஜெர்மனி அரசாங்கம் கலை மற்றும் அறிவியலுக்கான ஜெர்மனி தேசிய பரிசு என்ற சிறப்பு பரிசை உருவாக்க முடிவு செய்தது. 1936 ஆம் ஆண்டில், மூன்று ஜெர்மன் விஞ்ஞானிகளுக்கு பல்வேறு துறைகளில் அவர்கள் செய்த பணிகளுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் அவை நிராகரிக்கப்பட்டன. இருப்பினும், இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர், நோபல் குழு அந்த பரிசுகளை விஞ்ஞானிகளுக்கு வழங்க முடிவுசெய்தது.

 

யசிர் அரபாத்

ஜோசப் ஸ்டாலின், ஹிட்லர் போன்றவர்கள் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டபோது சில சிக்கல்கள் இருந்தபோதிலும், நோபல் பரிசின் நேர்மையை நோபல் குழு வைத்திருக்கவில்லை. எனினும், 1994 ஆம் ஆண்டில், யசிர் அராபத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது. இதனால் பெரிதும் குழப்ப சூழல் உருவாகியது. அவருடன், இட்ஸாக் ராபின் மற்றும் ஷிமோன் ஃபெரெஸ் ஆகியோர் இஸ்ரேலின் அமைதி மற்றும் பாலஸ்தீனப் பிரச்சினைக்கான ஒஸ்லோ மாநாட்டிற்கு பங்களித்ததால் இந்த பரிசை பெற்றனர். இருப்பினும், யசிர் அராபத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை அமைப்பு, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அவருக்கு பரிசு வழங்க நோபல் குழு எடுத்த முடிவு குறித்து கேள்வி எழுப்பபட்டது.

 

வலைத்தளத்தில் உள்ள சிக்கல்

2008 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு HPV ஐக் கண்டுபிடித்த ஹரோல்ட் சர் ஹோவ்சனுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு பரிசு வழங்க பலர் ஒப்புக்கொண்ட போதிலும், அந்த இடத்திற்கு நோபல் கமிட்டியின் அனுசரணை சிக்கலானது. ஏனெனில் இந்த நிறுவனம் வைரஸ் தடுப்பூசி நிறுவனத்தால் நிதியுதவி செய்யப்பட்டது. சிலர் இந்த நிகழ்வை பேரம்பேசுதல் தொடர்பான மோதல் என்று விளக்கியுள்ளனர்.

 

அன்னை தெரசாவின் விருது

கொல்கத்தாவின் ஏழை மக்களை மேம்படுத்துவதற்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த அன்னை தெரசா அவர்களின் சேவைக்காக நோபல் பரிசு வழங்கியுள்ளனர். அமைதிக்கான நோபல் பரிசை பொதுவாக நோர்வே மன்னர் மற்றும் நோபல் குழு வழங்கி, அதன் பின்னர் இரவு உணவு விருந்திற்கு ஏற்பாடு செய்வது பொதுவான வழக்கம். ஆனால் அன்னை தெரசா அந்த விருந்தில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். விருந்துக்கான செலவுகளில் கொல்கத்தாவில் ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளின் வயிற்றை நிரப்பக்கூடும் என்பதைக் குறிப்பிடுகிறது. அதன்படி, நோர்வே அரசு அன்னை தெரசாவுக்கு விருதுக்கான செலவை வழங்கியுள்ளது. அதன்மூலம் அதே ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று கொல்கத்தாவில் உள்ள இலட்சக்கணக்கான ஏழை குழந்தைகளுக்கு இரவு உணவை வழங்கியுள்ளார்.

 

இந்த கட்டுரை பற்றிய கருத்துக்களை பேஸ்புக் மூலம் தெரிவிக்க மறந்து விடாதீர்கள்.