பெரியவர்களால் தவிர்க்கமுடியாத குழந்தைத்தனமான செயற்பாடுகள்

 

இப்போது இருபது முப்பது வயதை எட்டியதும் அவர்களை பெரியவர்கள் என கூறுகின்றனர். இவர்களை குழந்தைப் பருவ சிறார்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, ​​இவர்களுக்கு வயதாகிவிட்டது என்றுதான் கூறுகிறார்கள். சரி பரவாயில்லை, இருபது முப்பது வயதுடைய அண்ணாமாரும் அக்காரும் மனதை தளரவிட்டுவிடாதீர்கள். குழந்தையாக இருக்கும் போது செய்த சில வியங்களை, இன்றும் செய்து கொண்டுதான் இருக்கிறோம். அவற்றில் சில நல்ல விடயங்களும் இருக்கத்தான் செய்கின்றது. அவை உங்களுக்கு மகிழ்ச்சியை தருவதாலேயே விடமுடியாமல் தொடர்கின்றீர்கள். அவ்வாறான சில குழந்தைத்தனமான விடயங்களை இன்று பார்ப்போம்.

 

தேநீரில் ஊறவைத்த பிஸ்கட்

மாலையில் தேநீர் குடிக்கும் நேரத்தில் ஒரு டிகிரி மாரி பிஸ்கட் பைக்கற்றையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு பிஸ்கட்டாக தொட்டு தொட்டு சாப்பிடும் சுவையும் பழக்கமும் சிறுவயது முதல் எமது நாக்கிற்கு பழக்கப்பட்டதுதானே. இதை அப்படியே தொடர்ச்சியாக செய்யும் அண்ணமார் அக்காமார் இன்னும் உள்ளனர். ​​இருபது முப்பது மட்டுமல்ல, ஐம்பதை கடந்தும் இதனைச் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஒரு மாரி பிஸ்கட்டை நனைத்து சாப்பிட ஒரு கோப்பை தேநீர் இல்லாவிட்டால் ஒரு கோப்பை பால் போதும். அதேபோல வேண்டிய பிஸ்கட் வர்க்கங்களை தொட்டு சாப்பிடலாம். ஆனால் டிக்கிரி மாரி பிஸ்கட்தான் அவற்றில் மிகவும் பிரபலமானது.

 

கார்டூன்

பல வகையான டீவி வகைகள் வந்தாலும், அன்று முதல் இன்று வரை சில விடயங்கள் தொடர்ச்சியாக போய்க்கொண்டிருக்கும். அதில் பெரும்பாலும் ஒரு சில கார்ட்டூன்களை சொல்லலாம். டொம் அண்ட் ஜெர்ரி, லூனி டியூன்ஸ், ஸ்பொஞ் பொப் ஸ்குயர் பேண்ட்ஸ் போன்றவை அவற்றில் சில. இப்பொழுதுகூட சில வீடுகளில் மாலையில் வேலை முடித்து வரும் ஆண்கள் குழந்தைகளோடு குழந்தைகளாக கார்ட்டூன் பார்ப்பதுண்டு.

 

பால்மாவும் சீனியும்

பால் குடிக்காதவர்கள்கூட இதனை செய்வதுண்டு. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். அவர்கள் சமையலறைகளில் பதுங்கி பால் பவுடர் மற்றும் சர்க்கரை போத்தல்களை தேடி அவற்றை திருட்டுத்தனமாக எடுத்து கையில் போட்டு சாப்பிடுவார்கள். முன்பு அம்மாவிற்கு தெரியாமல் சாப்பிட்டு இப்போது மனைவிக்கு தெரியாமல் சாப்பிடுகிறார்கள். பால் பவுடரைப் போலவே, மைலோ பவுடருக்கும் இதில் பங்குண்டு..

 

ஹெலிகொப்டர் சத்தம்

ஹெலிகொப்டர் சத்தம் கேட்டால், நீங்கள் எங்கிருந்தீர்கள் என்பதை மறந்து அதைப் பார்க்க ஓடலாம். வீட்டின் முற்றத்தில் இருந்து அது சென்ற இடத்தை கண்டுபிடிக்க முடியாதபோது, ​​ஹெலிகொப்டரை பற்றி அம்மாவிடம் கேட்டு எங்கு சென்றது என்று கவனித்துக்கொள்வதே குறிக்கோள்.

 

அம்மாவிடம் கடை சிற்றுண்டிகள் வாங்கிக் கேட்டல்

சந்தைக்குச் சென்றால் அம்மா வரும்போது, ​​எதையாவது கொண்டு வரும்படி கேட்பதும் முன்பிருந்து பழகிய ஒன்று. இன்றும் சாலையோரத்தில் ஏதாவது நொறுக்குத்தீனிகள், இனிப்புக்களை கண்டால் வாங்கிக்கொண்டு வருவது எம்மில் பலருக்கும் இருக்கும் பழக்கமாகும்.

 

திருட்டுத்தனமாக உணவுகளை சாப்பிடுதல்

சமையலறையில் எதையாவது திருடுவது வழக்கம். குறைந்தது ஒரு பப்படத்தையாவது சுருட்டிவிட்டு வந்துவிடுவார்கள். கேக் செய்யும் போது அதன் கிரீமை நக்குதல், ஏதாவது பலகாரம் செய்யும் போது சுடச்சுட வாயில் போட்டுக்கொள்வது இப்படியான வேலைகளும் இதில் அடங்கும். இந்த பழக்கம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இருக்கின்றது.