உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகி வரும் நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள் மற்றும் விளையாட்டுத்துறை நட்சத்திரங்கள் பலரும் தங்கள் இரசிகர்களால் பெரிதும் நேசிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கென ஒரு தனி பட்டாளமே உண்டு. ஆனால் அன்பிற்கும் வெறுப்பிற்கும் நூலளவே வித்தியாசம் உள்ளது. அந்த சூழ்நிலையை எதிர்கொண்டு தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் அளவிற்கு தள்ளப்பட்ட பிரபல நட்சத்திரங்கள் பற்றிய கதை இதுவாகும்.
ஜோன் லெனான்
பீட்டில்ஸ் மூலம் ஜோன் லெனான் மிகவும் பிரபலமானார். ஜோன் லெனான் ஒரு பாடகர், பாடலாசிரியர் மற்றும் உலக அமைதிக்கான ஆர்வலர். டிசம்பர் 8, 1980 இல் ஜோன் லெனான் அவரது இரசிகர் மார்க் சாப்மனால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலை நடந்த தினத்தன்று மாலை வீட்டை விட்டு வெளியேறிய ஜோன் லெனனிடமிருந்து சாப்மேன் ஒரு ஓட்டோக்ராப் பெற்றுக்கொண்டார். ஆனால் சாப்மேன், யாரும் எதிர்பாராத விதமாக இரவு தாமதமாக வீடு திரும்பும்போது லெனனை சுட்டுக் கொன்றுவிடுகிறார். பின்னர் அவர் தன்னுடன் கொண்டு வந்த ஒரு நாவலை எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் படித்துள்ளார். பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சாப்மேன் இன்னும் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
செலினா
80 மற்றும் 90 களில் மிகவும் பிரபலமான மெக்சிகன் பாடகிகளில் செலினா குயின்டனிலாவும் ஒருவர். யோலண்டா சால்டிவர் செலினா மீது பைத்தியம் பிடித்த ஒரு இரசிகர். யோலண்டாவின் படுக்கையறை செலினாவின் படங்களால் வடிவமைக்கப்பட்டது. செலினா மீதான இந்த ஈர்ப்பின் காரணமாக, யோலாண்டா செலீனாவின் அனுமதியுடன் ஒரு செலினா ரசிகர் மன்றத்தைத் தொடங்குகிறார். இதன் மூலம், யோலண்டாவும் செலினாவுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொள்கிறார். யோலண்டா செலினாவின் வணிக முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். ஆனால் காலப்போக்கில், யோலண்டா செய்த சில நிதி முறைகேடுகளை செலினா அறிந்து கொள்கிறாள். இதன் மூலம் இந்த இருவருக்கும் இடையே பிளவு ஏற்படுகிறது. யோலாண்டா செலினாவைக் கொலைசெய்த பின்னரே அந்த இடைவெளி முடிவடைகிறது
கிறிஸ்டினா கிரிமி
யூடியூப் பாடகியாக புகழ் பெற்ற கிறிஸ்டினா கிரிமி, பின்னர் வோசி என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியிட்டு 3 வது இடத்தை வென்றார். அவர் ஒரு பாடகியாகவும் நடிகையாகவும் பிரபலமாகி வந்திருந்தார். துரதிஷ்டவசமாக, 22 வயதில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டு உலகத்தை விட்டு பிரிந்து செல்ல வேண்டியிருந்தது. அமெரிக்காவின் ஆர்லாண்டோவில் உள்ள பிளாசா லைவ் தியேட்டரில் ஒரு நிகழ்ச்சியின் போது இரசிகர்களின் நினைவுகளில் கையெழுத்திடும் போது கெவின் ஜேம்ஸ் என்ற நபரால் அவர் சுடப்பட்டார். அங்கு, கிறிஸ்டினாவின் சகோதரர் உடனடியாக கெவின் ஜேம்ஸைப் பிடிக்கிறார். ஆனால் கெவின் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார். கெவின் ஜேம்ஸ் கிறிஸ்டினா கிரிரியின் மிகப்பெரிய இரசிகர் என்பது பின்னர் தெரியவந்தது.
ஆண்ட்ரஸ் எஸ்கோபார்
கொலம்பியாவின் மிகவும் பிரபலமான எஸ்கோபார், பப்லோ எஸ்கோபார் எனும் ஒரு போதைப்பொருள் வியாபாரி. பப்லோ எஸ்கோபார் படுகொலை செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குள் ஆண்ட்ரஸ் எஸ்கோபரின் படுகொலை, கொலம்பியாவிலும் உலகெங்கிலும் பப்லோவின் மரணம் போலவே கவனத்தை ஈர்த்தது. ஃபிஃபா உலகக் கோப்பை 1994 போட்டியில் இடம்பெற்ற தவறு காரணமாக இவரது வாழ்க்கை அன்றே முடிந்தது. ஐக்கிய அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில், எஸ்கோபார் தற்செயலாக தனது அணிக்கு எதிராக ஒரு கோல் அடித்தார் (own side goal) மற்றும் கொலம்பிய அணி போட்டியை இழந்து உலகக் கோப்பையிலிருந்து விலக வேண்டி ஏற்பட்டது. இதற்காக ஆண்ட்ஸ் எஸ்கோபார் கொலம்பியா மக்களிடம் மன்னிப்பு கேட்டார். எவ்வாறாயினும், சிறிது காலத்திற்கு பிறகு, ஆண்டர்ஸ் எஸ்கோபார் ஒரு உணவகத்திற்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் ஒரு மாஃபியா கும்பலைச் சேர்ந்த கால்பந்து இரசிகர்கள் குழுவால் கொல்லப்பட்டார். எஸ்கோபார் அடித்த தவறான கோலினால் அந்த மாபியா குழு பெருமளவு பணத்தை இழந்தது என்றும் அந்த கோபத்தினாலே அவரை கொன்றதாகவும் பலர் நம்புகிறார்கள்.
ரெபேக்கா ஷாஃபர்
கிறிஸ்டினா கிரிம்மியைப் போலவே, ரெபேக்கா ஷேஃபர் ஒரு அகால மரணத்தை சந்தித்தார். ரெபெக்காவுக்கு 21 வயதாக இருந்தபோது இறந்தார். மொடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் பின்னர் ஒரு சினிமா தொடரில் நடிகையாக புகழ் பெற்றார். அவரது கொலையாளி, ரொபர்ட் ஜோன் போர்டியாக்ஸ், மூன்று ஆண்டுகளாக அவரைப் பின்தொடர்ந்து கடிதங்களை எழுதியுள்ளார். இந்த கடிதங்களில் ஒன்றிற்கு ரெபேக்காவால் பதிலளிக்கப்பட்டது. இருப்பினும், ரெபேக்காவை சந்திக்க ரொபர்ட் ஜோன் போர்டோவின் பல முயற்சிகள் அவரது மெய்க்காப்பாளர்களால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், ரெபேக்கா தனது ஒரு படத்தில் மற்றொரு நடிகருடன் உடலுறவு கொள்கிறார். இது ரொபர்ட் போர்டோவை எரிச்சலூட்டுகிறது. ரொபர்ட் போர்டியாக்ஸ் ரெபேக்காவை சந்தித்தபோது கொலைசெய்துள்ளார். கொலையாளியான ரொபர்ட் பார்டோட்டுக்கு அப்போது 19 வயது மாத்திரமே.
டிமேபாக் டாரெல்
டிமெபாக் டார்ரேல் என அழைக்கப்படும் டாரெல் லான்ஸ் அபோட் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு ஒரு திறமையான ஹெவி மெட்டல் கிட்டார் கலைஞராக இருந்தார். பன்டேரா மற்றும் டேமேஜ் பிளான் ஆகிய இரு இசைக்குழுக்களுக்கான முன்னாள் கிட்டார் கலைஞரான டிம்பாக் டாரெல் 2004 இல் படுகொலை செய்யப்பட்டார். ஜோன் லெனான் படுகொலை செய்யப்பட்ட நாளான டிசம்பர் 8 ஆம் திகதியே டாரெல்லும் படுகொலை செய்யப்பட்டார். டிம்பாக் டாரெல் அவரது இரசிகர்களில் ஒருவரான நாதன் கெய்ல் என்பவரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். அவர் கிட்டார் வாசிக்கும் போது கச்சேரிக்கு வருகிறார். ஒருவித மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது பாடல்களை டயம்பாக் டாரலின் இசைக்குழு திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆல்பர்ட் எபோஸ்
கமரூனிய கால்பந்து வீரரான ஆல்பர்ட் எபோஸ்ஸியின் மரணம் மர்மமானது. எபோஸ்ஸின் அணி அல்ஜீரிய கால்பந்து போட்டியில் தோல்வியை தழுவியது. தோல்விக்குப் பிறகு களத்தில் இருந்து வெளியேறும் வழியில், கால்பந்து இரசிகர் எறிந்த ஏதோவொன்றால் தலையில் தாக்கப்பட்டதால் எபோஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எபோஸி பின்னர் மூளையில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பால் இறந்தார். எவ்வாறாயினும், அடுத்தடுத்த விசாரணையில், எபோஸியின் மரணம் தூரத்திலிருந்து வீசப்பட்ட பொருளினால் அல்ல என்றும், அருகிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்டது என்றும் முடிவு செய்யப்பட்டது.