இருபதாம் நூற்றாண்டில் நாடுகள் விரைவாக ஜனநாயகத்தை நோக்கி நகர்ந்தபோது, பல நாடுகள் தங்கள் முடியாட்சிகளை அகற்றின. சில மன்னர்கள் தங்கள் சக்தியை காகிதத்தில் மட்டுப்படுத்தினர். ஐரோப்பாவில் இன்று பல அரசர்களும் ராணிகளும் உள்ளனர். ஆனால் அவர்களில் பலருக்கு அதிகாரம் இல்லை. தங்கள் நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களால் கிரீடங்களை இழந்த சில மன்னர்களைப் பற்றி இன்று நாம் பேசப்போகிறோம்.
மன்னர் கயனேந்திரர்
பல நூற்றாண்டுகளாக முடியாட்சியாக இருந்த நேபாளத்தை குடியரசாக மாற்ற நேபாள நாடாளுமன்றம் முடிவு செய்தது. இதன் விளைவாக ஷாவின் வம்சத்திற்கு இருந்த முடியாட்சி அதிகாரம் இழக்கப்பட்டது. இந்த நேரத்தில், நாட்டின் கடைசி மன்னரான கயனேந்திர மன்னர், அவர் ஆட்சி செய்த நாட்டின் சாதாரண குடிமகனாக மாறிவிட்டார். நேபாளத்தின் முன்னாள் மன்னர் பிர் பிக்ரம் ஷாவின் சகோதரரான கயனேந்திரர், நேபாள அரச குடும்பத்தைச் சேர்ந்த பல உயர் உறுப்பினர்களை படுகொலை செய்த பின்னரே மன்னராக முடிசூட்டப்பட்டார். ஆனால் இறுதியில், அந்த துரதிஷ்டம் கயனேந்திரரிடம் சென்று அவரை அரச பதவியில் இருந்து கீழிறக்கியது.
மன்னர் இரண்டாம் பூவாட்
1952 எகிப்திய புரட்சியின் விளைவாக, அதுவரை எகிப்தை ஆண்ட மன்னர் ஃபாரூக் பதவி விலகினார். அதன் பின்னர் பிறந்து சில மாதங்களேயான அவரது மகன் ஃபுவாட் ராஜாவானார். ஆனால் இந்த குழந்தை இளவரசனின் ஆட்சி ஒரு வருடத்திற்கும் குறைவாகவே இருந்தது. இதன் பின்னர் எகிப்து குடியரசாக மாறியது. பூவாட்டின் பெற்றோர் அவரை சுவிட்சர்லாந்திற்கு அழைத்துச் சென்றனர். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திய குடியுரிமையைப் பெற்ற பின்னர் அவர் அவ்வப்போது தனது சொந்த நாட்டிற்கு திரும்பினாலும் அவரது நிரந்தர குடியிருப்பு ஐரோப்பாவில் உள்ளது.
கான்ஸ்டன்டைன் II
கான்ஸ்டன்டைன் மன்னர் தனது நாட்டில் ஒரு இராணுவ சதித்திட்டத்தை எதிர்த்ததால் பாதுகாப்புக்காக ஐரோப்பாவுக்கு தப்பிச் செல்ல வேண்டியிருந்தது. இதற்கிடையில், வாக்கெடுப்பைத் தொடர்ந்து இராணுவ ஆட்சியாளர்களால் முடியாட்சி அகற்றப்பட்டது. அந்த வாக்கெடுப்பும் ஜனநாயக விரோத முறையில் நடைபெற்றது என்று கூறப்படுகிறது. இராணுவம் அகற்றப்பட்ட பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பு, கிரேக்க மக்கள் முடியாட்சிக்கு ஆதரவாக இல்லை என்பதை உறுதிப்படுத்தியது. கான்ஸ்டன்டைன் மன்னர் இந்த முடிவை அறிந்து கொண்டு கிரேட் பிரிட்டனில் வசித்தாலும், கிரேக்க மக்களின் நலனுக்காக பல்வேறு விருந்தோம்பல் திட்டங்களை தொடங்கவும் அவர் மறக்கவில்லை.
மன்னர் சைமன் II
தனது தந்தை மூன்றாம் போரிஸ் திடீரென இறந்த பிறகு பல்கேரியாவின் அரியணையில் ஏறியபோது சைமனுக்கு ஆறு வயதுதான். இரண்டாம் உலகப் போரில் ஜேர்மன் நட்பு நாடாகச் செயற்பட்ட சோவியத் ரஷ்யா பல்கேரியா மீது படையெடுத்து வாக்கெடுப்பில் முடியாட்சியைத் தூக்கியெறிந்தது. பல்கேரிய அரச குடும்பம் முதலில் எகிப்துக்கு தப்பி ஓடியது. பின்னர் ஸ்பெயினால் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது. கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கவிழ்த்த பின்னர் சைமன் பல்கேரியாவுக்கு திரும்பி 2001இல் பிரதமராக பதவியேற்றார். பல்வேறு அரசியல் எழுச்சிகளில் தனது கட்சி தோற்கடிக்கப்பட்ட பின்னர் அவர் அரசியலில் இருந்து விலகினார்.
ஜான்ஹித் பின் அப்துல்லா
கிரேட் பிரிட்டனால் சான்சிபருக்கு சுதந்திரம் வழங்கப்பட்டமை, மன்னர் அப்துல்லாவின் கீழ் ஒரு அரசியலமைப்பு முடியாட்சிக்கு களம் அமைத்தது. இருப்பினும், சான்சிபார் புரட்சியை கம்யூனிஸ்ட் அனுதாபிகளின் ஒரு குழு வழிநடத்தியது. இதனால் வந்த விளைவால் மன்னர் அப்துல்லா ஓமானுக்கு தப்பி ஓடினார். சான்சிபார் பின்னர் அண்டை நாடான டாங்கன்யிகாவுடன் ஒன்றிணைந்து தான்சானியா என்ற புதிய மாநிலத்தை உருவாக்கிக்கொண்டது.
இரண்டாவது காலிப்
இப்போது யேமனின் ஒரு பகுதியாக இருக்கும் குவாட்டி என்ற சிறிய இராச்சியத்தின் கடைசி சுல்தானான காலிப் இப்போது சவுதி அரேபியாவில் வசிக்கிறார். நாட்டின் நிலைமைப்படி, அவரது தந்தையும் கிரீடத்தை தவிர்க்க முயன்றார். இறுதியில் காலிப் அரசாங்க எதிர்ப்பு சக்திகளால் அரியணையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தலாய்லாமா
சீன படையெடுப்பு வரை திபெத்தில் வேறு வகையான முடியாட்சி இருந்தது. தலாய்லாமாவை திபெத்தியர்கள் தங்கள் ராஜாவாக கருதினர். தலாய்லாமா என்று அழைக்கப்படும் லாமா, அதன் அனைத்து வடிவங்களிலும் நாட்டின் ஆன்மீகத் தலைவராக நம்பப்பட்டார். தலாய் லாமா சீன படையெடுப்போடு இந்தியாவுக்கு தப்பி ஓடினார். இன்றுவரை அவர் தர்மசாலாவில் வசித்து, திபெத்தியர்களை வழிநடத்துகிறார்.