காதல் ஒரு விசித்திரமான விடயம். இந்த உலகில் எவருக்கும் காதல் என்ற சொல்லின் சரியான வரையறையைக் கண்டறிவது கடினம். மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாடல் வரிகளின் ஒன்றான “காதலுக்கு கண்கள் இல்லை மானே” என்பதற்கிணங்க, உண்மையில் காதலுக்கு கண்கள் இல்லையென எமக்கு நான்கு தெரியும். சில பல அனுபவசாலிகளும் அதையே சொல்கின்றனர். அந்த பாடலை கேட்டிராதவர்களோடு கேட்டவர்களையும் சேர்த்து இணைத்து, காதலுக்கு உண்மையில் கண்களில்லை என்பதை நிரூபித்த சில பெண்மணிகளை பற்றி பார்க்கப்போகிறோம்.
குவேனி
குவேனி எமது நாட்டின் வரலாற்றுடன் தொடர்புடைய ஒருவர். வெளிநாட்டிலிருந்து வந்த விஜயனை காதலித்து குவேனி தனது இனத்தையே காட்டிக்கொடுக்கிறார். இதன் விளைவாக, இலங்கையில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த யக்ஷ சமூகம் தனது அதிகாரத்தை இழந்தது. இதன்மூலம் விஜயன் இலங்கையின் ராஜாவானார். ஆனால் அவரை நேசித்த பெண்ணை விட தனது முடியாட்சியின் பாரம்பரியத்தின் மீது கவனத்தை செலுத்தி, மதுரையிலிருந்து ஒரு இளவரசியை மணந்து இலங்கைக்கு வந்தபோது, குவேனி தனது இரண்டு குழந்தைகளுடன் தனது உறவினர்களிடம் சென்றாள். அவளுக்கு அதன்பிறகு என்ன ஆனது என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்லப்போவதில்லை. ஏனெனில் இந்த கட்டுரையைப் படிக்கும் கிட்டத்தட்ட அனைவருக்கும் இது தெரியும்.
மதிவதனி அம்பு
விடுதலை புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் இதயத்தை கவர்ந்த பெண்தான் இவர். ஆரம்பத்தில், புலிகளின் எந்த உறுப்பினரும் திருமணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இந்த நேரத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஒரு விரதம் தொடங்கியது. ஒடுக்குமுறை அரசாங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க புலிகள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் எதிர்ப்பாளர்கள் இந்த முடிவுக்கு உடன்படவில்லை. இதன் விளைவாக புலிகள் போராட்டக்காரர்களைக் கடத்தி இந்தியாவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடைபெற்ற ஒரு ஹோலி விழாவின் போது, விடுதலை புலிகளின் முகத்தில் மதிவதனி வண்ண பவுடர்களை தடவினார். இவ்வாறு அவர்களின் காதல் கதை அங்கு தொடங்கியது. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் விடுதலை போராட்டத்தில் உயிரிழந்தனர்.
சித்ராங்கனி பெர்னாண்டோ
இலங்கையில் சில திருமணங்கள் வீட்டின் வற்புறுத்தலினால் நடைபெறுகின்றன. ஆண்களை விட பெண்கள் இந்த திருமணங்களுக்கு அதிகம் பலியாகிறார்கள். திருமணத்திற்கு பிறகு அந்தப் பெண் தன் கணவனை வேறு வழியின்றி நேசிக்கத் தொடங்குகிறாள். சித்ராங்கனி விஜேவீர என்பவரும் அது போன்ற ஒரு பாத்திரம். தனது சகோதரர் சந்ரா பெர்னாண்டோவின் வற்புறுத்தலின் பேரில் அவர் விஜேவீரவை திருமணம் செய்து கொண்டார். விஜேவீரவின் மரணத்துடன், அவருக்கும் அவரது ஐந்து குழந்தைகளுக்கும் அரசாங்கப் படைகளிடம் சரணடைவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.
முத்துலட்சுமி
சந்தனக்கடத்தல் மன்னன் என வர்ணிக்கப்பட்ட வீரப்பனின் மனைவியான இவர், வீரப்பனுக்கு ஏற்ற மனைவி. அவரது பல சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு முத்துலெட்சுமியும் பங்களித்துள்ளார். இதன் காரணமாக அவர் அவ்வப்போது கைது செய்யப்பட்டார் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் அடிக்கடி மோதல்களை ஏற்படுத்திக்கொண்டதாக அறியப்பட்டது. இருப்பினும், அவர் தனது இரண்டு மகள்களுக்கும் சிறந்த கல்வியைக் கொடுக்க முடிந்தது. அவர் தமிழ்நாடு நாடாளுமன்றத்திற்குச் சென்ற முயன்றபோதும், அந்த முயற்சி கைகூடவில்லை.
ஈவா பிரவுன்
அடோல்ஃப் ஹிட்லர் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு பெண்ணை நேசித்திருந்தால், அது இவருக்கு மட்டுமே. அவளும் அவரிடம் அளவுகடந்த அன்பை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவருடனான வாழ்க்கையின் மன அழுத்தம் காரணமாக, அவர் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். இறுதியில், இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தின் போது, ஹிட்லரும் அவரது மனைவியும் அவர்கள் தங்கியிருக்கும் பதுங்கு குழியை அடையவிருப்பதை செஞ்சிலுவைச் சங்கம் அறிந்துகொண்டது. ஆனால் சில மணி நேரம் கழித்து அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
கிளாரா பெட்டாசி
இவர் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் காமக்கிழத்தியாக அதாவது வப்பாட்டியாக இருந்தார். மேலும் அவரது சட்டபூர்வமான மனைவியை விடவும் இவரை அதிகம் நேசித்தார். அவர் முசோலினியை விட 28 வயது இளையவள். மேலும் ஏற்கனவே திருமணமானவர். முசோலினியை இத்தாலிய தேசபக்தர்கள் கடத்திச் சென்று சுட்டுக் கொன்றபோது, இவரும் முசோலியின் முன் நின்று தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இறுதியில், கொலையாளிகள் முசோலினி மற்றும் கிளாரா உட்பட சம்பவ இடத்தில் கொல்லப்பட்ட அனைவரின் உடல்களையும் தூக்கிலிட்டனர்.