ஒட்டோமான் பேரரசின் வரலாறு

 

ஒரு காலத்தில் ஒட்டோமான் பேரரசு உலகம் முழுவதையும் ஆளக்கூடிய ஒரு உலக சக்தியாக இருந்தது. உதாரணமாக, ஒட்டோமான் பேரரசால் கான்ஸ்டான்டினோப்பிளைக் கைப்பற்றியதுடன் ஐரோப்பாவின் முன்னேற்றத்தையும் உலகின் பிற பகுதிகளையும் தீர்மானித்தது. எவ்வாறாயினும், முதல் உலகப் போர் வெடித்தபோது ஒட்டோமான் பேரரசு பலவீனமடைந்து, வெற்றிகரமான சக்தியாக மாறிய கிரேட் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளின் கிளர்ச்சி நடவடிக்கைகள் காரணமாக ஒட்டோமான் பேரரசு எமது நாட்டின் வரலாற்று புத்தகங்களில்கூட அதிகம் பேசப்படவில்லை. இன்று லைபீ தமிழ் அப்படி முற்காலத்தில் அதி சக்திவாய்ந்த ஒட்டோமான் பேரரசைப் பற்றிய ஒரு சுருக்கமான குறிப்பை உங்களுக்குக் கொண்டுவருகிறது.

 

உஸ்மானுடன் தொடங்கிய ஒட்டோமான் பேரரசு

செல்ஜுக் என்ற உஸ்மான் இந்த பரந்த பேரரசின் நிறுவனர் என்று கருதப்படுகிறார். அவர் அன்டோலியா தீபகற்பத்தில் மிகச் சிறிய பிரதேசத்தின் ஆட்சியாளராக இருந்தார். சமகால வரலாற்றாசிரியர்களால் ஒரு முக்கியமான ராஜாவாக கருதப்படவில்லை. இதன் காரணமாக, நவீன அறிஞர்கள் அவர் இங்கிலாந்தின் மன்னர் ஆர்தரைப் போன்ற ஒரு கட்டுக்கதை என்றும் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், ஒட்டோமான்கள் தங்கள் மூதாதையரை மதித்தனர். மேலும் உஸ்மானின் வாளினை கையில் வைத்திருப்பது சுல்தானின் முடிசூட்டு விழாவாக கருதப்பட்டது.

 

 துருக்கியர்கள் இல்லாத ஒட்டோமான்கள்

ஒட்டோமான் பேரரசு என்ற பெயர் உலகம் முழுவதும் இன்று பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த நடைமுறைகள் சரியானவை அல்ல. ஏனென்றால் ஒட்டோமான் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் துருக்கி அரசு உருவாக்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக, இதுபோன்ற பல ஒட்டோமான் சுல்தான்களின் தாய்நாடு ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தது. பல்கேரியா போன்ற ஒட்டோமான் பிரதேசங்களிலிருந்து சுல்தானின் உள் நகரத்திற்கு அழைத்து வரப்பட்ட கிறிஸ்தவ பெண்கள் இஸ்லாமிற்கு மாறினர். சிலரின் குழந்தைகள் சுல்தான்களாக மாறினர்.

 

சிறந்த சுல்தான்

ஒட்டோமான் சுல்தான்களில் சுலைமான்தான் மிகப் பெரியவன். அதனால்தான் அவர் பெரிய சுலைமான் என்றும் அழைக்கப்படுகிறார். அவரது ஆட்சியின் போது, ​​ஒட்டோமானின் பலம் ஐரோப்பாவில் அதன் உச்சத்தை அடைந்தது. அவர் ஹங்கேரியைக் கைப்பற்றி வியன்னாவை முற்றுகையிட்டார். பின்னர் அவர் கீழ் தங்கி வாழ வேண்டியிருந்தது. எவ்வாறாயினும், அவரது ஆட்சியின் போது ​​அவர் பேரரசிற்கு பல பெரிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். பல இன, மத மக்கள் அவருடைய ஆட்சியின் கீழ் ஆட்சி செய்து கிறிஸ்தவர்களுடன் சமரசம் செய்யும் கொள்கையை பின்பற்றினர் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

 

 ஒட்டோமான் பேரரசின் மிக மோசமான தோல்வி

ஒட்டோமான் வரலாற்றில் மிகவும் அவமானகரமான தோல்விகளில் ஒன்று நெப்போலியன் போனபார்ட்டுடனான போர். அந்த நேரத்தில் எகிப்து ஒட்டோமான் பேரரசின் கீழ் இருந்தது. பிரிட்டனின் கிழக்கு சாம்ராஜ்யத்தை அச்சுறுத்துவதற்காக நெப்போலியன் எகிப்தைக் கைப்பற்ற ஒரு மூலோபாய முடிவை எடுத்தார். இதனால் எகிப்தில் துறைமுகத்தைத் தாக்கினார். அவரது தந்திரோபாய சூழ்ச்சிகளின் விளைவாக சுமார் 4,500 பிரெஞ்சு துருப்புக்களால் 30,000க்கும் மேற்பட்ட ஒட்டோமான் துருப்புக்கள் தோற்கடிக்கப்பட்டன. 6,000க்கும் மேற்பட்ட ஒட்டோமான் வீரர்கள் கொல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் தப்பி ஓடிவிட்டனர். ஆனால் பிரெஞ்சு வீரர்கள் மிகக் குறைந்த சேதத்தை மாத்திரமே சந்தித்தனர்.

 

சகோதரர்களின் கொலை

ஒட்டோமான் சுல்தான்களுக்கு பெரிய தோட்டங்களும் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளும் இருந்தன. எனவே, அடுத்த சுல்தானுக்கு அவர்களுக்கு இடையே ஒரு நிலையான போட்டி இருந்தது. இதன் விளைவாக, சில சுல்தான்கள் அபிஷேகம் செய்யப்பட்டவுடன் தங்கள் சகோதரர்களைக் கொன்றனர். மூன்றாம் சுல்தான் முகமது ஆட்சிக்கு வந்தவுடன் அவரது 19 சகோதரர்களையும் படுகொலை செய்வதற்கான உத்தரவு இந்த பதவி ஆசையின் ஒரு உச்சகட்டமாகும். இந்த சம்பவம் பேரரசு முழுவதும் விரும்பத்தகாத ஒன்றாக இருந்தது. இதனால், அவரது மகன் சுல்தான் அகமது I, இந்த பாரம்பரியத்தை முடித்து, சுல்தானின் மூத்த மகன் கிரீட உரிமம் பெற்ற இளவரசனாக இருப்பான் என்றும், அவனை அச்சுறுத்தும் சகோதரர்களை சிறையில் அடைக்கலாம் என்றும் முடிவு செய்தான்.

 

பெண்களுக்கு சுல்தானின் நியமனம்

1533 மற்றும் 1656க்கு இடையில், சுல்தானின் மனைவி அல்லது தாய் ஒட்டோமான் பேரரசின் அரசியலில் வலுவான செல்வாக்கை செலுத்தினர். வரலாற்றாசிரியர்கள் இந்த காலகட்டத்தை பெண்கள் சுல்தானேட் என்று குறிப்பிடுகின்றனர். சில சமயங்களில், இந்த பெண்கள் சுல்தான்களை வீழ்த்தும் அளவுக்கு சக்திவாய்ந்தவர்களாக மாறினர். சரியாக சொல்லப்போனால் பாகுபலியில் ராஜமாதாவைபோல. முன்னர் குறிப்பிட்டபடி, இங்கே மற்றொரு விசித்திரம் என்னவென்றால் இந்த பெண்கள் அனைவருமே ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். எதிர்கால கட்டுரையில் அவற்றைப் பற்றிய தகவல்களை உங்களிடம் கொண்டு வருகிறோம்

 

ஒட்டோமான் பேரரசின் சரிவு

ஒட்டோமான் பேரரசின் சரிவு முதலாம் உலகப் போரின் முடிவில் ஒஸ்ரியா மற்றும் ஜெர்மனியின் முடியாட்சிகளின் சரிவைத் தொடர்ந்து வந்தது. ஒட்டோமான் பேரரசின் பிரதேசங்களை நேச நாட்டுப் படைகள் ஒழித்த போதிலும் ஒட்டோமான் பேரரசைக் கவிழ்ப்பதில் அவர்கள் அதிக அக்கறை காட்டவில்லை. இருப்பினும், இரண்டாம் உலகப் போரின் தோல்வியுடன், சீர்திருத்தவாதிகளின் சக்தி படிப்படியாக அதிகரித்தது. 1922 காலப்பகுதியில் துருக்கி என்ற புதிய நாடு ஒட்டோமான் பேரரசில் முளைத்தது. அதன் முக்கிய தேசிய சட்டமன்றம் ஒட்டோமான் பேரரசை கவிழ்த்து அதை குடியரசாக மாற்ற முடிவு செய்தது.