இலங்கையில் உள்ள மக்களின் எதிர்பார்ப்புகள் சாதாரணமானவை அல்ல. இதனை கனவுகள் என்றும் கூறலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான கனவுகள் காணப்படுகின்ற போதும் பொதுவாக அவை பலரது கனவுகள் ஒன்றாகவே உள்ளன. இந்த எதிர்பார்ப்புகள் வெவ்வேறு வகையாகும். இவை அப்பாவித்தனமான கனவுகள். நாடு முன்னேறிவரும் விதம் மற்றும் நாட்டு மக்கள் அதைக் கையாளும் முறை காரணமாக மக்களின் மனதில் தோன்றிய எதிர்பார்ப்புகளே இவை. இதைக் கேட்கும்போது நம்மீது நாமே வருத்தப்பட்டாலும் இதுதான் உண்மை.
வெளிநாட்டு கனவுகள்
இது வெளிநாட்டினரின் கனவுகளைப் பற்றியது அல்ல. இது எம் மக்களின் வெளிநாட்டுக் கனவாகும். இதற்கு முன்னர் இலங்கை மக்கள் இலங்கையில் எதையும் இழக்கவில்லை என்றாலும், வெளிநாடு போவோமா என்று கேட்ட முதல் நிமிடத்திலேயே இலங்கையை விட்டு வெளியேற அவர்கள் தயாராக உள்ளனர். அந்த வாய்ப்பு வரும்வரை அவர்கள் எதுவும் செய்யாமல் இருக்கவும் மாட்டார்கள். வெளிநாட்டில் வாழும் மக்கள், ஏஜென்சிகள், அதற்குத் தேவையான தகுதிகள், பணம் மற்றும் பல விடயங்கள் ஒரு இலங்கையனை வெளிநாட்டுக்குச் செல்ல தூண்டும் விடயங்களாக அமையலாம். எல்லோரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். முதலில், இங்கிருந்து வெளியேறுவது தான் நல்லது என்றும் சொல்கிறார்கள். பின்னர் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் என்றால் வேண்டாம் என்று கூறப்படுகிறது. அதன் பிறகும் மத்திய கிழக்கு நாடுகளும் வேண்டாமென கூறுகின்றனர். இறுதியாக, உலகின் மிக வெற்றிகரமான நாடுகள் தான் எஞ்சியிருக்கும். அங்கு சென்ற பின்னரே, எல்லா எதிர்பார்ப்பும் சிறிது காலத்திற்கு மாத்திரமே என்ற எண்ணம் தோன்றும்.
அரச உத்தியோகம்
அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசாங்க போக்குவரத்தை நாங்கள் எவ்வளவு குறை கூறினாலும், எங்கள் மக்களுக்கு அரசாங்க வேலையைத் தவிர வேறு எதிலும் பெரிய ஆசை இருப்பதில்லை. சிலர் அரசாங்க வேலையைத் தவிர வேறு எதையும் செய்யத் தயாராகவும் இல்லை. இப்போது வேலையில்லாத பட்டதாரிகள் சங்கத்திற்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எண்ணத்தில் நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு வேலை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று அவர்கள் நினைக்கிறார்கள். தேர்தலை முன்னிருத்தி அரசாங்கமும் அரசாங்க வேலைகளை வழங்குகிறது.
நான்கு சக்கர கனவு
ஒரு பையன் வேலை செய்யத் தொடங்கும் போது, அவன் முதலில் செய்ய முயற்சிப்பது பைக் வாங்குவதாகும். ஒவ்வொரு முறையும் அவர் பைக் ஓட்டும்போது, கவனத்தை ஈர்க்கும் கார்களில் கண்ணை கொள்ளையடிக்கும் பெண்களையும் பார்க்கிறார். லோன் போட்டாவது அல்லது நல்ல விலைக்கு பைக்கை கொடுத்தாவது கார் வாங்க முயற்சிப்பார். இதைப் பற்றி சிந்திக்கும்போது, இதயத்தை உடைக்கும் சில விடயங்களும் இடம்பெற வாய்ப்புக்கள் உள்ளன. முன்னாள் காதலி ஒரு பையனுடன் காரில் செல்வதை காண்பதும் இதில் அடங்கும். அதுபோன்ற விடயங்களை தாங்குவது மிகவும் கடினம். எனவே இவற்றிலிருந்து ஆறுதல் பெற விரும்பினால், சிறிதானாலும் பரவாயில்லை என்று நான்கு சக்கர வாகனத்தை வாங்க வேண்டும்.
மாடி வீடு
இலங்கையில் பொது மக்களின் கனவு இரண்டு மாடி வீடு அல்லது தொடர்மாடி குடியிருப்புக்களில் ஒரு வீடு. குறைந்த இடத்தில் அல்லது ஒரு மாடி வீட்டில் கணிசமான இடமுள்ள தோட்டத்துடன் கட்டப்பட்ட ஒரு மாடி வீட்டில் பலர் வசதியாக உணர்கிறார்கள். நாங்கள் திருமணத்தைப் பற்றி பேசினாலும், வீடுபற்றி பேசும்போது இரண்டுமாடி வீடு என்று சொல்வது கூட மிகவும் உற்சாகத்துடனேயே கூறுகின்றோம்.
ஒரு குழந்தை, செல்ல குழந்தை
ஒரு இளைஞன் அல்லது யுவதி வேலைக்குச் சென்றவுடன், அவர்கள் மனதில் தோன்றும் முதல் விடயம் இப்போது திருமணம் செய்துகொள்ள வேண்டுமா என்பதுதான். இளைஞர்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாதபோது, இது பற்றிய சிந்தனை பெற்றோருக்கு ஏற்பட்டு திருமணமும் நடக்கின்றது. திருமணமான தருணத்திலிருந்து ஒட்டுமொத்த சமூகமும் “குழந்தை குட்டி ஏதும் பெற்றுக்கொள்ள ஆசையிருக்கா, எத்தனை மாசம், எப்ப டேட் தந்திருக்காங்க” என்று கேட்கிறது. மனைவியின் வயிறு பெரிதாகும்வரை இந்த கேள்விகளும் சோதனைகளும் தொடர்கின்றன. இதன் காரணமாக குழந்தை பிறக்கும் வரை ஒரு குடும்பம் பூரணமற்றதென நினைக்கின்றனர்.
அறிந்த, தெரிந்த, புரிந்த அரசியல்வாதி
ஒரு பிரபலமான அரசியல்வாதி அவர்களுக்கு நெருக்கமாக இருக்கவேண்டுமென்பது பலரின் கனவாக உள்ளது. நன்கு அறியப்பட்ட அரசியல்வாதியை தெரிந்து வைத்திருப்பதானது குழந்தையை பாடசாலைக்கு சேர்த்தல், மூத்த மகனுக்கு வேலை, திடீர் இடமாற்றம், கிராமப் பிரச்சினையை தீர்த்தலில் செல்வாக்கு செலுத்துதல் ஆகியவற்றிற்கு ஏற்றதென பொதுவாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக, அரசியல்வாதி ஒரவருடன் நெருங்கிய உறவைப் பேண வேண்டுமென்ற கனவு சமுதாயதத்தில் பலரிடம் காணப்படுகின்றது.
சேமிப்பு
எப்போதுமே கடன் இல்லாமல் வாழ வேண்டும் என்ற கனவு பொதுமக்களுக்கு உள்ளது. சேமிப்புக் கணக்கைத் தொடங்கி, தங்கள் வாழ்க்கையுடன் முன்னேற வேண்டும் என்பதும் பலருக்கு உள்ள ஒரு கனவாகும். ஒரு நாடு என்ற வகையில், நாம் கடனில் இருக்கிறோம். ஆனால் தனியாக நோக்கும்போது கடன்பட்ட வாழ்க்கையை வாழ யாரும் விரும்புவதில்லை.